வியாழன், 8 ஜனவரி, 2009

காத்திருப்பில் கரையும் காலங்கள் ...

"பாகர் சதுக்கம்" ! என்ன இது என்று வியப்பில் நெற்றியை சுருக்கும் தங்களிடம், B.முட்லூர் பஸ் நிறுத்தம் தான் அது என்று சொன்னால் விளங்கிக்கொள்வீர்கள். சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு பின்னர் நேரில் சந்தித்த நாகூர் நண்பரொருவர் பொட்டிலறைந்தாற்போல் கேட்டார், " இப்பவும் முட்லூர்லே தான் பஸ்ஸுக்காக காத்து கெடக்குறிங்களா"?.
பதில் சொல்லஇயலவில்லை.

ஊர் பொது நலன் அமைப்புகளால் அவ்வப்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிடப்படுவதும், கண்துடைப்பாக அனைத்துப் பேருந்துகளும் பரங்கிப்பேட்டை வழியாக ஓரிரு நாட்கள் வந்து காவல்நிலையத்தில் வந்து கையெழுத்திட்டு செல்வதும் வாடிக்கை நிகழ்வாகி விட்ட ஒன்று.

தமிழகத்தின் எந்த பேரூராட்சிகளிலும் இல்லாத அளவுக்கு,ஊராட்சி ஒன்றியம்,பேரூராட்சி, மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறைநடுவர் நீதிமன்றம்,தொடர்வண்டி நிலையம்,கிளைச் சிறை, சுங்க அலுவலகம்,காவல் நிலையம், இரு அஞ்சலகங்கள் பொதுப்பணித்துறை, கால்நடை மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனை, மின்சார வாரியம், வேளாண்மைஅலுவலகம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை வங்கி, அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சிஉயராய்வு மையம்,தொலைத்தொடர்பு துறை, பத்திரப்பதிவு துறை,மீன்வளத் துறை, உப்பு துறை,கப்பல் போக்குவரத்து துறை, தீயணைப்பு நிலையம்,உயர்நிலை,மேல்நிலை,ஆரம்ப பள்ளிகள்,நூலகம் மற்றும் ஏராளமான தனியார் கல்விநிறுவனங்கள்,இந்துஸ்தான் கேஸ், இப்படி அதிகமான அரசுத்துறை அலுவலகங்கள்நிரம்பப்பெற்றிருந்தும் பரங்கிப்பேட்டைக்கு போக்குவரத்து என்பது அந்தோ பரிதாபம்.

பரங்கிப்பேட்டைக்கு வந்து-செல்ல வேண்டுமென்ற உரிமம் பெற்றும் வர மறுக்கும் பேருந்துகளின் அலட்சியம் எதனை நமக்கு உணர்த்துகின்றது, அரசுத் துறையானவட்டார போக்குவரத்து துறையின் பொறுப்பற்ற தன்மையையா? அல்லது பரங்கிப்பேட்டையை பொறுத்த வரைக்கும் தட்டி கேட்க ஆளில்லை என்ற மானப் போக்கையா? காலம் மாறி வருகிறது..... இருந்தும் (பேருந்துக்கான) காத்திருப்புகள் மாறியதாகத் தெரியவில்லை.

எண்ணமும் கருத்தும்: ஹம்துன் அப்பாஸ்
நன்றி: http://www.mypno.com/

3 கருத்துகள்:

Gulam Mohamed சொன்னது…

Well said

மீரா(முத்து) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மீரா(முத்து) சொன்னது…

நல்ல பதிவு, வாக்குறுதிகளை கொடுத்து அதை காற்றில் பறக்கவிட்டு பஸ்க்கு நம்மை பாகர் சதுக்கத்தில் காத்திருக்கவைக்கும் அரசியல் வியாபாரிகள் அவசியம் படிக்கவேண்டும்