வெள்ளி, 21 நவம்பர், 2008

இறப்புத் தகவல்

ஜூன்னத் மியான் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், எஹையா மரைக்காயர், ஹாஜா அமீனுதீன் ஆகியோர்களின் தாயாரும், முஹம்மது அலி (பாபு) அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மஹ்மூதியா மினி ஷாதி மஹால்


ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் மஹ்மூதியா ஷாதி மஹாலை தொடர்ந்து மற்றொரு திருமண மஹால், "ஹாஜி B.M.ஹபிபுல்லா மரைக்காயர் நினைவு மஹ்மூதியா மினி ஷாதி மஹால்" என்ற பெயரில் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடந்தேறி வரும் நிலையில், இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பெயர் பலகை வைக்கப்பட்டது

வியாழன், 20 நவம்பர், 2008

இறப்புத் தகவல்

மேட்டு தெருவில், மர்ஹூம் ஒலி முஹம்மது அவர்களின் மகனாரும், ஜெயினுல் கவுஸ், ஜூனைதுல் பக்தாத் ஆகியோர்களின் சிறிய தகப்பனாரும், அக்பர் அலி அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறப்புத் தகவல்

ராயல் தெருவில் (பங்களா வீடு), மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், தம்பிமா, அபுல் கலாம் ஆகியோர்களின் தாயாரும், சிராஜூதின், இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோர்களின் மாமியாருமாகிய சேத்தபீ என்கின்ற ஜலால் பீ மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று பகல் 3 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சனி, 8 நவம்பர், 2008

கண்டன ஆர்ப்பாட்டம்


மாலேகான் குண்டு வெடிப்பில், இந்துத்துவா சக்திகள் கைது செய்யப்பட்டதையொட்டி , விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென்றும், இன்ன பிற வழக்குகளையும் இதே பாணியில் விசாரிக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத், பரங்கிப்பேட்டை கிளையின் சார்பில் இன்று மாலை நான்கு மணி அளவில் சஞ்சீவிராயர் கோயில் தெருவில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தொடர் முழக்கம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.